கத்தி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி; சௌந்தர்யா அறிவிப்பு

கத்தி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி; சௌந்தர்யா அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்க, அனிருத் இசையமைத்து இருக்கும் படம் ‘கத்தி’. இப்படத்தின் இசையை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஈராஸ் நிறுவனம். வரும் செப்டம்பர் 18ம் தேதி ’கத்தி’ படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்பு ‘மாற்றான்’, மற்றும் கோச்சடையான்’ படத்தின் பாடல்களை எராஸ் நிறுவனம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யா எராஸ் நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில் ரஜினி, கத்தி இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகின்றது.