கடல்வழி சென்ற மேலும் 30 பேரை வான்வழியில் திருப்பி அனுப்பியது ஆஸி.

அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியா சென்ற 30 இலங்கை இளைஞர்கள் இன்று (07) இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விசேட விமானம் மூலம் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களின் நிலை குறித்து விளக்கப்பட்டு அவுஸ்திரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைய அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.

செல்லுபடியற்ற விசா, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களாலும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒகஸ்ட் 13ம் திகதிக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து 156 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்