கஜகஸ்தான் விமான விபத்தில் 27 பேர் பலி

கஜகஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளான‌தி‌ல் 27 பே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லியானா‌ர்க‌ள்.

கஜகஸ்தான் - உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் கஜகஸ்தான் நாட்டின் தலைமை எல்லைப் பாதுகாப்பு அதிகாரி கேணல் டுர்கன்டெக் ஸ்டாம்பெகோவ் தலைமையில் 20 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, உஸ்பெகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் தரையில் மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில், விமானப்படை வீரர்கள் 7 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் என மொத்தம் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்து‌க்கான காரணம் குறித்த எந்த தகவலையும் இன்னும் காவல்துறையினர் வெளியிடவில்லை. விபத்தின் காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.