உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் கேமரூன் கால்பந்து அணி வீரர்கள் தங்களுக்கு கூடுதலாக போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி பிரேசில் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி ஆட்டத்தில் கூட சில வீரர்கள் விளையாட மறுத்தனர்.
இந்த நிலையில் அந்த நாட்டு கால்பந்து சங்கம் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக போனஸ் கொடுத்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
அதன் பின்னரே கேமரூன் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் பிரேசிலுக்கு பயணமானார்கள்.