இலங்கை மாணவனுக்கு அவுஸ்திரேலியாவில் 18 மாத சிறைத்தண்டனை!

இலங்கை மாணவனுக்கு அவுஸ்திரேலியாவில் 18 மாத சிறைத்தண்டனை!

இலங்கையின் மாணவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 18 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வாடகை சிற்றூந்து சாரதியாக பணியாற்றிய வேளையில் குறித்த 28 வயதான மாணவர், 34 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்த குறித்த பெண் மீதே இலங்கை மாணவர் குற்றம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 3வருட சிறைத்தண்டனை பெற்றுள்ள குறித்த மாணவர், தண்டனை முடிந்ததும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று பேர்த் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.