இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை

இங்கிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியின் போது உரிய நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி விதிகளின்படி சந்திமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நியூசிலாந்து அணியுடனான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் லசித் மாலிங்க அணிக்கு தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.