இந்திய மீனவர்கள் 94 பேர் இலங்கை கடற்படையால் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இந்திய மீனவர்கள் 94 பேர் இலங்கை கடற்படையால் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 94 இந்திய மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
 
கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மீனவர்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இவ்வருடம் மே மாதம் இந்தியாவில் நரேந்தர மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் இதுவரை 225 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
 
94 மீனவர்களை 62 படகுகளுடன் விடுதலை செய்யுமாறு ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.