ஆப்கானில் தற்கொலை தாக்குதல்; மூவர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் மூவர் பலியாகியுள்ளனர். 

கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளமொன்றுக்கு அருகிலேயே தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கூஹோஸ்ட் நகரிலுள்ள இவ் இராணுவ முகாம் நுழைவாயிலே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

இத்தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். 

அண்மைக்காலமாக கூஹோஸ்ட் நகரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஏனைய நகரங்களைப் போன்று வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.