அவுஸ்ரோலியா நோக்கி பயணித்த 17 பேர் இந்தோனேசியாவில் கைது!

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 17 பேர் இந்தோநேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமத்தராவின் தென்மேற்கு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்தோநேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.