சவுகார்ஜானகியின் அபிமானத்துக்குரிய நடிகையாகி விட்டார் நயன்தாரா.
சீதை வேடத்தில்அவர் நடித்த ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தைப் பார்த்த சவுகார், அன்று முதல்நயன்தாராவின் தீவிர ரசிகையாகி விட்டார்.‘திரிஷா, நயன்தாரா ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும்’ என்று சொன்ன சவுகார், நடிப்புக்கு திரிஷா, அழகுக்கு நயன்தாரா என்று வர்ணிக்கிறார்.
‘திரிஷா படங்களை பாருங்க. அந்தபொண்ணு அவ்ளோ இயல்பா நடிக்கும். எதிர்ல ஒரு கேமரா இருக்குங்கிற எண்ணமே இருக்காது.நயன்தாராவை பாருங்க. அப்படியே பார்த்துகிட்டு இருக்கலாம். அவ்ளோஅழகு.
இவங்க ரெண்டுபேரையும் அடிக்கடி நான் சந்திச்சு பேசியிருக்கேன்’ என்ற சவுகார், தற்போது கன்னடத்திலும், தெலுங் கிலும் சில படங்களில் நடித்துவருகிறார்.