'மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டோம்', 'சுடுவோம்' என அச்சுறுத்தி சுவரொட்டிகள்

 'மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டோம்', 'சுடுவோம்' என அச்சுறுத்தி சுவரொட்டிகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர். இராசகுமாரன் ஆகியோரை எச்சரிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 
 
'இவர்கள் புலிகளை உருவாக்குகின்றனர்', 'இவர்களை சுடுவோம்', 'மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்' ஆகிய வாசகங்களுடன் இந்த சுவரொட்டிகள்; ஒட்டப்பட்டுள்ளன. 
 
'சுடுவோம்' என்ற தலைப்பிட்டு, நிவாஸ், தமிழ்ச்செல்வன், ஐங்கரன், பிரிட்டோ ஆகிய 4 மாணவர்களின் பெயர்களும், ஆசிரியர் சங்கத்தலைவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.