T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் வெற்றியை தனதாக்கியது

 

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது ஐ.சி.சி 20 – 20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி முதலாவது வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ளது.

முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஒவர்கள் நிறைவில் 182 ஓட்டங்களைப் பெற்றதுடன் சிம்பாப்வே அணியை 100 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சிம்பாப்வே அணிக்கெதிராக நேற்றுப் பெற்ற வெற்றியால் இலங்கை அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்ததுடன் இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் வெளிப்படுத்திய திறமை வெளிப்பாடுகள் சிறப்பாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்த சிம்பாப்வே அணியின் தலைவர் பிரென்டன் ரெய்லர், இன்றைய தினம் சிம்பாப்வே வெளிப்படுத்திய திறமை வெளிப்பாடுகளை விடத் தாங்கள் சிறந்த அணி எனவும், எனினும் இலங்கை அணி மிகப்பலமான அணி என்பதை வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.