20-20 உலக கிண்ணத்தில் நிச்சயம் வித்தியாசத்தை உணரலாம்!

20-20 உலக கிண்ணத்தில் நிச்சயம் வித்தியாசத்தை உணரலாம்!

டுவென்டி-20 உலக கிண்ணப் போட்டிகளில் நிச்சயம் வித்தியாசத்தை காண முடியும் என இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

டுவென்டி-20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் வருகிற 16ம் திகதி தொடங்குகிறது. 

ஆசிய கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத சுரேஷ்ரெய்னா, 20 ஓவர் உலக கிண்ணப் போட்டியில் அணியில் இடம் பிடித்துள்ளார். 

இந்த போட்டிக்கான தன்னை தீவிரமாக தயார் படுத்தி வரும் ரெய்னா அளித்த பேட்டியில், ஆசிய கிண்ணப் போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது கஷ்டமாக தான் இருந்தது. 

எனவே உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடல்தகுதியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைத்து வருவதாகவும், கவனத்தை அதிகபடுத்த தியான பயிற்சிகள் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் முன்னாள் அணித்தலைவர் கங்குலி ஆலோசனைகள் செய்ததாகவும், உலக கிண்ணப் போட்டியில் நிச்சயம் வித்தியாசத்தை காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.