14 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் பேட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய வேளை மழை குறுக்கிட்டமையின் காரணமாக போட்டி முடிவு டக்வத் லூயிஸ் முறைப்படி தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 105 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.