வேலைக்கு வந்த இளம் சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்

வேலைக்கு வந்த இளம் சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்வதற்காக ரூர்கி பகுதியில் இருந்து இரண்டு இளம் வயது சகோதரிகளை அழைத்து வந்தார். 

சமீபத்தில், ரூர்கியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த இளைய சகோதரி, அந்த பாதிரியார் தன்னையும் அக்காவையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தாயாரிடம் தெரிவித்தார். 

மேலும், பாதிரியாரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் தங்களை அடுத்தடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்த பெண் கூறியதையடுத்து, அவரது தாயார் இது தொடர்பாக ரூர்கி பொலிசில் புகார் அளித்தார். 

இதனையடுத்து, சஹரன்பூர் மாவட்டத்துக்கு விரைந்து சென்ற ரூர்கி பொலிசார், பாதிரியாரின் வீட்டில் இருந்த மூத்த சகோதரியை மீட்டனர். இளம்பெண்களை அடைத்து வைத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் பாதிரியாரை கைது செய்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சதார் பசார் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

தலைமறைவாக இருக்கும் பாதிரியாரின் மகன் மற்றும் அவரது நண்பர்களை சதார் பசார் பொலிசார் தேடி வருகின்றனர்.