வேலணை மண்கும்பானில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்.வேலணை மண்கும்பான் கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.

இச்சடலம் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கரையொதுங்கிய சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.