வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு

வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு

வரலாற்றில் முதன் முறையாக கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு இடமாகிய வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற உள்ளது. 

போப் பிரான்சிஸ் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இத்தாலியிலுள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் வாடிகனுக்கு செல்லவுள்ளனர். இதையடுத்து, வாடிகன் தேவாலயத்தில் வழக்கமான பிராத்தனையுடன் இஸ்லாமிய தொழுகையும் நடத்தப்படுகிறது. தொழுகைக்கு இடையில் திரு குர் ஆன் வசனங்களும் வாசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாடிகன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டு வழிபாட்டு நிகழ்வினை உலகம் முழுவதும் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம், சிலுவைப் போர் காலத்தில் தொடங்கி பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நிலவும் பகையை விடுத்து, இரு நாட்டுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியை போப் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.