வலி – கிழக்கு பிரதேச சபைக்கு புதிய செயலாளரை நியமிக்க ஆளுங்கட்சி கோரிக்கை

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளரை மாற்றி புதிய செயலாளரை நியமிக்குமாறு பிரதேச சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களினால் பிரதேச சபையில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்தில்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களினால் ஒப்பமிடப்பட்ட அறிக்கை பிரதேச சபை தவிசாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தற்போது இருக்கின்ற செயலாளர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் தம்முடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய தகுதிவாய்ந்த செயலாளர் ஒருவரை நியமிக்க வலியுறுத்தியே இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி உறுப்பினாகளால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளூரட்சி மன்றங்களின் உதவி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வலிகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.உதயகுமார் தெரிவித்தார்.