வற்புறுத்தியதால் மண்ணெய் ஊற்றி எரிந்தார் மாணவி

சக்கோட்டை சபேரியாக் கல்லூரி மாணவி றோஜ் நிதர்சினி வயது 16 மண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துள்ளார்.

சிறிய தாயார் படிக்குமாறு வற்புறுத்தியதால் மனமுடைந்த நிலையில் தனக்குத் தானே மண்ணெய் ஊற்றி எரிந்த நிலையில் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்பப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  இம் மாணவி திக்கம் அல்வாயைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.