வரும் ஏப்ரலில் ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாகவும் அடுத்த வருடம் ஏப்ரலில் குழந்தை பிறக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தன் முதல் குழந்தையை கடந்த வருடம் இறுதியில் குழந்தை பெற்றெடுத்தார்.

பெண்ணாக பிறந்த முதல் குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டார்.

குழந்தை பெற்ற பின்பு உடல் பருமனான இவர், தற்போது உடல் எடையை குறைத்து கல்யாண் நகைக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் எயிட்ஸ் விழிப்புணர்வுக்கான நல்லெண்ண தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் ஐஸ்.

இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு தயாராகி விட்டதாகவும் அதற்கான மாறுதல்கள் உடலில் தெரிவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால் முதல் குழந்தை ஆரத்யா பிறந்து 10 மாதங்களே ஆகும் நிலையில் 2வது பிரசவத்துக்கு ஐஸ்வர்யாராய் திட்டமிட்டிருக்கமாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன.

எனினும் கடந்த யூலை மாதம் அவர் கருத்தரித்ததாகவும், வரும் ஏப்ரல் மாதம் 2வது குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.