இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் மோசடி இல்லை இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள்புள்ளித்திட்ட அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.
இதனால் இதில் மோசடிகள் இடம்பெறாது என்றும் வடக்கு முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாதாம்; என வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா தெரிவித்தார்.
இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய வீட்டுத்திட்டம் என்பதில் பயனாளிகள் தெரிவு நேர்மையான முறையிலேயே இடம்பெறுகின்றது ஆனால் முதலமைச்சர் இந்தியாவிற்குச் சென்று இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவில் முறைகேடு என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சர் என்றொரு ஆளுக்கு விளக்கமாக தெரியப்படுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.