மது போதையுடன், அனுமதிப்பத்திரமுமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய இரு இளைஞர்கள் 21 ஆயிரம் ரூபா அபராதத்தை பருத்தித்துறை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
நெல்லியடிப் பொலிஸ் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இரு இளைஞர்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது இருவரிடமும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. அத்துடன் இருவரும் மது போதையிலும் காணப்பட்டமை தெரியவந்தது.
இருவர் மீதும் நெல்லியடிப் பொலிஸார் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தனித் தனியே வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் பருத்தித்துறை மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது இருவரும் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டதன் பேரில் தலா 10 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்து நீதிவான் தீர்ப்பு வழங்கினார்.