யாழ். வைத்தியசாலை சிற்றூழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ். வைத்தியசாலை சிற்றூழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அரச வைத்தியசாலை ஊழியர்கள் சங்கத்தினர் நால்வர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

ஸ்ரீலங்கா ரன்தய சௌக்கிய சேவை சங்கமும், அரச வைத்தியசாலை ஊழியர்கள் சங்கம் இணைந்து இன்று மதியம் யாழ். போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பொலன்னறுவையில் கடந்த முதலாம் திகதி சிக்கன கடனுதவி சங்க ஊழியர்களினால் நடாத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அரச வைத்தியசாலை ஊழியர்கள் சங்கத்தினர் 4 பேர்  தாக்கப்பட்டதை கண்டித்து நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.