யாழ். வேலணை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் மற்றொரு சடலம் இன்றும் கரையொதுங்கியது

யாழ்.வேலணை, மண்கும்பான் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு ஆணின் சடலம் இன்று காலை கரையொதுங்கியிருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று சனிக்கிழமை குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில் இன்று ஞாயிறு காலையும் மற்றொரு சடலம் கரையொதுங்கியிருக்கின்றது.

இந்தச் சடலமும் முற்றாக உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

சடலத்தின் தலைப்பகுதி முற்றாக உருக்குலைந்துள்ளது, மேலும் சடலத்தில் கறுப்பு நிறத்திலான உள்ளாடையொன்று காணப்படுகின்றது.

தற்போது சடலத்தை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மீட்டுள்ளதோடு, இந்த விடயம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழில் இருந்த சென்ற மீன்பிடி படகுகளுக்கோ, மீனவர்களுக்கோ எந்த அபாயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கரையொதுங்கியுள்ள சடலங்கள் குறித்து பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.