யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா திடீர் மாற்றம்; யாழ். தளபதியாக ஜகத் அல்விஷ்?

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா திடீர் மாற்றம்; யாழ். தளபதியாக ஜகத் அல்விஷ்?
யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இடமாற்றத்திற்கான காரணமேதும் தெரியாத போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நம்பிக்கைக்கு உரியவவரான அவர் கிளிநொச்சியில் இருந்தே யாழ்ப்பாணத்திற்கான இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். 
 
முன்னாள் போராளிகளை கொண்ட சிவில் பாதுகாப்பு படையினை தோற்றுவித்தவர் என்ற வகையில் அவர் அனைத்து தரப்பிடையேயும் கவனம் பெற்றிருந்தார்.
 
இலங்கையின் இராணுவத் தளபதிகளுள் ஒருவரை கடமை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் புலனாய்வு கட்டமைப்பினையும் கையாள அனுமதித்ததன் மூலம் அவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொண்டுள்ள நம்பிக்கையினை அப்போது அது வெளிப்படுத்தியிருந்தது.
 
இதனிடையே, யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஷ் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா கொழும்பு இராணுவ படைத் தலைமையகத்துக்கு திடீரென இன்று அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜகத் அல்விஷ் யாழ்.தளபதியாக நியமிக்கப்படுவார் என்று கொழுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
ஜகத் அல்விஷ் தற்போது இஸ்ரேலுக்கான இலங்கை துணைத் துதூதுவராகச் செயற்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.