யாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கடந்த வாரம் கைது

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கடந்த வாரம் கைது

நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 30 பேர் மற்றும் போதையில் வாகனம் செலுத்திய 38 பேர் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

நேற்று (15-09-2012)நடைபெற்ற யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்.மாவட்டத்தில் பொது இடத்தில் மது போதையில் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 18 பேரும் பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டில் 11 பேரும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரும் கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேரும் சூழல் மாசடையும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நீதி மன்றங்கள் பலவற்றிலும் பிடியாணை பிறப்பிக்கப் பட்ட 30 பேர் கைது செய்யப் பட்டனர். போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 38 சாரதிகள் கைதுசெய்யப்பட் டுள்ளனர். 

இந்த 10 பேரும் அவரவரது குற்றத்துக்கேற்ப பிணையில் விடுவித்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டும் உள்ளனர் என்று எரிக்பெரேரா தெரிவித்தார்.