யாழ். மாம்பழம் சந்தியில் கடை உடைத்து திருட்டு

யாழ். மாம்பழம் சந்தியில் பூட்டிவைக்கப்பட்டிருந்த கடையின் ஓட்டைப்பிரித்து அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இதில் கடையில் இருந்த சீடிப்பிளேயர் மற்றும் கையடக்கத் தொலைபேசிக்குரிய பற்றரிகள், வூவர் பிளேயர்கள் என பல்வேறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை குறித்த கடை இவ்வருடம் நான்காம் மாதம் உடைக்கப்பட்டு மூன்று லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் அந்த நஷ்டத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது மன உழைச்சலைத்தருவதாக கடையின் உரிமையாளர் சுயேந்திரன் தெரிவித்தார்