யாழ் புல்லுக்குளத்தில் மண்டையோடு மீட்டு

யாழ் புல்லுக்குளத்தில் மனித மண்டையோடு ஒன்று நேற்று முந்தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வற்றிய நிலையில் காணப்படும் இப் புல்லுக் குளத்தை படையினர் தற்போது ஆழமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் இப் புல்லுக்குளத்தில் இறங்கிய மாணவன் ஒருவன் மனித மண்டையோட்டை கண்டு அதனை எடுத்து முனியப்பர் வீதியருகில் வைத்ததாகத் தெரியவருகின்றது. இருப்பினும் நேற்று அதனைக் காணவில்லை. இதே வேளை படையினரும் புல்லுக்குளத்தை ஆழமாக்கும் பணியினை கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைத்துள்ளனர்