யாழ். - பருத்தித்துறை போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட சிற்றூர்தி எரிப்பு: மூவர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக்கு இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் சிற்றூர்தி ஒன்று இனந்தெரியாத நபர்களினால் எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வடமாராட்சி, தொண்டமனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமராட்சி வடக்கு சிற்றூர்திச் சேவைச் சங்கத்தின் தலைவர் அன்ரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் 3பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.