யாழில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற எட்டுப் பேர் கைது

யாழில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற எட்டுப் பேர் கைது

யாழ். நகரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற எட்டுப் பேர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

யாழ். நகரப் பகுதியில் மின்சார சபை அதிகாரிகளுடன் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்மானியில் மாற்றங்கள் செய்தல் மற்றும் தாமாக மின்வயர்களை இணைத்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களும் இதன் போது இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

யாழில் சட்டவிரோத மின்சாரம் பெறும் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் பொலிஸாரும் மின்சார சபையினரும் இணைந்து சட்டவிரோத மின் பாவனையாளர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாளை இவர்கள் அனைவரும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன்சிகேரா மேலும் தெரிவித்தார்.