முதலமைச்சர் பதவியை இழப்பாரா ஜெயலலிதா?

முதலமைச்சர் பதவியை இழப்பாரா ஜெயலலிதா?
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன என, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங், ´தி இந்து´ விடம் தெரிவித்துள்ளார். 
 
தண்டனை விபரம் மீதான விவாதம் 3.00 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.