முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இளைஞர் காலிழப்பு…

யாழ் முகமாலைப்பகுதியில் இரும்பு சேகரிக்கச் சென்ற இளைஞன் கண்ணிவெடியில் சிக்கி கால் பாதத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் முகமாலை இத்தாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் கபில்ராஜ் (வயது18) என்ற இளைஞரே கால் பாதத்தை இழந்தார்.

அவர் உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்த கால் பாதம் சத்திரசிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.

மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த மாடு அறுத்துக்கொண்டு ஓடிவிட்டதால் அதனைப்பிடிப்பதற்கு முற்பட்டபோதே கண்ணிவெடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.