மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் சேர்ந்த பத்மநாதன் சிவகரன் (வயது 15) என்பவரே காணாமல் போயிலுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.