மட்டக்களப்பு மாமாங்கம் புகையிரதத்தில் மோதி இருவர் பலி!

மட்டக்களப்பு மாமாங்க பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ளனர்.

மதுபோதையில் குறித்த இருவரும் ரயில் தண்டவாளத்தில் நித்திரைகொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் மதுபான போட்டல் ஒன்று கிடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரது சடலங்களும் தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.