பின்லேடன் மருமகனை குற்றவாளியாக அறிவித்தது அமெரிக்கா

பின்லேடன் மருமகனை குற்றவாளியாக அறிவித்தது அமெரிக்கா

அல்கொய்தா தலைவர் பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்த். குவைத் நாட்டை சேர்ந்த இவர் பின்லேடனின் வலது கரமாகவும், அல்கொய்தா இயக்கத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்தார். 

2013–ம் ஆண்டு துருக்கி நாட்டில் அவர் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரை துருக்கி அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. 

அவர் அமெரிக்காவின் கவுன்டினாமாபே ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது அமெரிக்கா ரெட்டை கோபுரம் தகர்ப்புக்கு சதி செய்தது. அமெரிக்கர்களை கொல்ல சதிதிட்டம் தீட்டியது. பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் ஷுவில் வெடிகுண்டை வைத்து தகர்க்க முயற்சி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. 

இது தொடர்பான வழக்கு நியூயார்க் பெடரல் கோர்ட்டில் நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சுலைமான் அபு கெய்த் குற்றவாளி என தீர்ப்பு கூறினார்கள். இதற்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

அவர் மீதான குற்றச்சாட்டுக்காக ஆயுள் வரை அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும் என்று தெரியவருகிறது.