பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது நடவடிக்கை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உரும்பிராய் பகுதியில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய திடீர் சோதனையின் போதே பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் பாவனைக்குதவாத காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் முதற்தடவையாக இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.