பாக்கிஸ்தானில் தாக்குதல் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

கராச்சி விமான நிலைய தாக்குதலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

விமான நிலையத்தின் உள்ளே கழுகுப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்ற மத்திய உளவு அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.