நல்லூர் வடக்கு வீதியில் புதிய கோபுரம் அமைக்க நடவடிக்கை

நல்லூர் வடக்கு வீதியில் புதிய கோபுரம் அமைக்க நடவடிக்கை

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வடக்கு வீதியில் புதிய கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கை நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதன் கட்டுமானப்பணிகள் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தை போன்று வடக்கு வீதயிலும் கோபுரம் அமைக்கப்படவுள்ளதாக  நல்லூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.