நல்லூர்க் கந்தன் இரதோற்சவத்தையொட்டி வருடந்தோறும் நடைபெறும் நயினை நல்லூர் திருத்தலம் பஜனைப் பாதயாத்திரை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அன்றைய தினம் அபிஷேக பூசைவழிபாடு இடம் பெற்று வேல் பூசையுடன் மேல் எடுத்துக் கொண்டு மண்கும்பான் , அல்லைப்பிட்டி , மண்டைதீவு , பண்ணை , யாழ்ப்பாணம் , வில்லூன்றி , கந்தர்மடம் வழியாக 16ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை நல்லூர் திருத்தலத்தை சென்றடையும்.