தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை நிலைநாட்டிய வட மாகாண இளைஞன்!

தேசிய அளவில் மீண்டும் ஒரு தமிழன் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்துள்ளான்.

தேசிய குத்துச் சண்டை போட்டி 2012 இல் வட மாகாண சாதனை வீரர் இரஞ்சிதநாதன் ரமேஸ் 70 கிலோவுக்கும் 75 கிலோவுக்கும் இடைப்பட்ட எடை உடையோர் பிரிவில் போட்டியிட்டு வெண்கல பதக்கம் வென்று உள்ளார்.

இவர் பருத்தித் துறையில் அல்வாய் வடக்கை சேர்ந்ந்தவர்.

வட மாகாண சம்பியனாக கடந்த மாதம் தெரிவாகி இருந்தார்.

கடந்த மூன்று நாட்களாக கொழும்பில் இடம்பெற்று வந்த தேசிய போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை அடைந்தார்.

இவர் தென்னிலங்கை வீரர்களுக்கு ஈடு கொடுத்து மிகவும் சிறப்பாக சண்டையிட்டு இருந்தார்.