திருமண மண்டபத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து மரணம்

தேனி அருகே அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் ஜோதிராணி (19)க்கு அதேப் பகுதியைச் சேர்ந்த அழகன் மகன் மணிகண்டனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

நேற்று காலை திருமண மண்டபத்தில் உறவினர்கள் கூடியிருக்க, மணமேடைக்கு அழைத்த வரப்பட்ட மணப்பெண் ஜோதிராணி, மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். 

திருமணத்துக்காகக் கூடியிருந்த உறவினர்கள் இந்த செய்தியை அறிந்து சோகத்தில் ஆழ்ந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.