யாழ் வடமராட்சி வதிரிப் பகுதியில் வீதியில் தனியாகப் பயணித்த பெண்ணைத் தாக்கிவிட்டு தங்கத் தாலியை அபகரிக்க முற்பட்டவர் பெண்ணின் கூக்குரலால் முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பெண் வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயமொன்றுக்குச் சென்று விட்டுத் தனியாக வீதியால் திரும்பிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம மனிதர்கள் கீழே விழுத்தித் தாக்கியுள்ளனர்.
ஒருவர் குறித்த பெண் மீது தாக்கும்பொழுது மற்றைய நபர் அணிந்திருந்த தங்கத் தாலியை அபகரிப்பதற்காக அறுக்க முற்பட்டுள்ளார். இதனால் குறித்த பெண் கூக்குரலிட்டுக் கத்தியபொழுது மர்ம மனிதர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் இப்பிரதேசத்தில்
பெண்கள் தனியாக நடமாட முடியாத நிலை தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.