தரம்குறைந்த டீசல்! தபால் திணைக்கள வாகனங்களால் வீதியில் செல்ல முடியாது

தரம்குறைந்த டீசல் பாவனையின் காரணமாக தபால் திணைக்களத்திற்கு சொந்தமாக 26 வாகனங்கள் பாதிப்படைந்துள்ளதாக தபால் திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வான் உட்பட லொறிகள் 26உம் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தபால் திணைக்கள தலைவர் ஜயந்த விஜயசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக அந்த வாகனங்களை பாவிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.