தரங்குறைந்த டீசல் பயன்பாடு - 300 க்கும் அதிகமான பஸ்களுக்கு பாதிப்பு

 

தரங்குறைந்த டீசல் பயன்பாட்டினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 300 க்கும் அதிகமான பஸ்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 


இதன் காரணமாக நாளொன்றிற்கு சுமார் 15 இலட்சம் ரூபா நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

பாதிக்கப்பட்டுள்ள பஸ்களை புனரமைப்பதற்கு மேலதிகமாக ஆறு இலட்சம் ரூபாவுக்கு அதிக தொகை ஏற்கனவே செலவாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரி கூறினார்.

தரக்குறைவான டீசல் பயன்பாட்டினால் நாளாந்தம் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை அதிவேக மார்க்கத்தில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஏழு சொகுசு பஸ்களும் அண்மையில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன.