தரக்குறைவான டீசல் காரணமாக நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ரயில்களின் எஞ்சின்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது.
இதற்கு தரக்குறைவான டீசலே காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த புகைவண்டி எஞ்சினில் ஏற்பட்ட பாதிப்பிற்கு காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என ரயில் நிலைய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.