தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 240 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் நாட்டைவிட்டுச் சென்று தமிழகத்தில் தங்கியுள்ள சிலருக்கே இந்த பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிகள் நாடு திரும்புவதற்கு பல தடை விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் இலங்கையர்களா என உறுதிப்படுத்த முடியாமையால் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் குறித்த அகதிகள் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து ஆராயப்பட்டு 240 இலங்கை அகதிகளுக்கு பிறப்பு அத்தாட்சிப்த்திரம், பிரஜாவுரிமை, கடவுச்சீட்டு ஆகியன வழங்கப்பட்டுள்ளதாக தமிழக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.