தமிழகத்தில் இலங்கை அகதிகள் வீடு கட்ட ஜெயா நிதி ஒதுக்கீடு

தமிழகத்தல் வாழும் இலங்கை அகதிகள் வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 21 இலங்கை அகதிகள் முகாமில் வாழ்பவர்கள், தாங்கள் வீடு கட்ட, வீடு ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.