தமிழகத்திற்கு நீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவு

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், வரும் அக்டோபர் 15 முதல் 31 வரை, காவிரியில் தமிழகத்திற்கு 8.75 டி.எம்.சி நீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவிடபட்டுள்ளது. மத்தியநீர் வளத்துறை செயலர் துருவ்சிங் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம்,கேரளா மற்றும் புதுவை மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கர்நாடகம் மறுப்பு

காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவுப்படி, 8.75 டி.எம்.சி நீர் விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமது மாநிலத்திற்கே தண்ணீர் போதவில்லை என்று, கர்நாடகம் கைவிரித்துள்ளது. பிரதமர் உத்தரவுப்படி தமிழகத்திற்கு, காவிரி நீர் விட கர்நாடகம் ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.