டீசல் உரிய தரத்துடன் இல்லை என்பது நிரூபனம் - இ.போ.ச

 

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள டீசல் உரிய தரத்துடன் இல்லை என்பது நிரூபனமாகியுள்ளதென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 


நிறுவன மட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின்போது இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள டீசலில் பெறப்பட்ட மாதிரிகள் மற்றும் தொழிநுட்ப கோளாறுக்கு இலக்கான பஸ்களின் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தரமற்ற டீசல் பயன்படுத்தப்பட்டதால் இலங்கை போக்குவரத்து சபைக்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தரமற்ற டீசல் பயன்படுத்தப்பட்டதை அடுத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 35 பஸ்கள் செயழிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட்டதால் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிடத்தக்களவு வருமானத்தை இழக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.