சுஷ்மா சுவராஜ் நியமனத்திற்கு உலகத் தமிழர் பேரவை எதிர்ப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஈழன் இன்று சனிக்கிழமை காலை 11 மணி அளவில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் தனது ஆதரவாளர்களோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். 

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அவர், 

இந்திய வெளியுறவுத்துறையின் அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவரை உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்றார்.